‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபத்தில் வெளியான படங்களில் தரத்தின் அடிப்படையிர் பாராட்டை அள்ளியதோடு, வசூல் அடிப்படையிலும் வெற்றியடைந்த படம் குரங்கு பொம்மை. பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன் முதலானோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான 'குரங்கு பொம்மை' வெற்றிப் படமாக அமைந்த மகிழ்ச்சியுடன், அந்த வெற்றியில் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்ற வகையில் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, குரங்கு பொம்மை படத்தை பாராட்டியதோடு, முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசினார். “ரசிகர்களால் பாராட்டப்பட்டதோடு அவர்களின் ஆதரவினால் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் புதிய படங்கள் வருவதால் குரங்கு பொம்மை படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றும், சில தியேட்டர்களில் காட்சிகளை குறைத்து விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிற ஒரு படத்தை நிறுத்துவது, தூக்குவது அநாகரீகமான செயல். இது போன்ற விஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதைப்போல பத்திரிகைகளும் இதுபோன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி கண்டித்து எழுத வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்!