தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் படு தோல்வியடைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ராவணன், கடல்' ஆகிய படங்களை விடவும் மோசனமான தோல்வியைத் தழுவியது அந்தப் படம். இருந்தாலும் அந்தத் தோல்வியையும் தட்டிவிட்டு அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார் மணிரத்னம்.
அவருடைய அடுத்த படத்தில் ஜோதிகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். படத்தில் நாயகர்களாக நடிக்க விஜய் சேதுபதி, நானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருவரது கைவசமும் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் அவர்களது தேதி கிடைப்பது சிரமமாக உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சேதுபதி, நானி இருவருமே அவர்களுக்காகக் கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேடி வரும் கதைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இருப்பார்களா என்பதை அலசிப் பார்த்து நடித்து வருகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கும் தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது. மணிரத்னம் படமாச்சே என்று நடிப்பார்களா அல்லது அவர்களுக்குப் பொருத்தமான கதையாக இருந்தால் மட்டும் நடிப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.