எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையின் மாணவர் ஸ்ரீகண்டன் இயக்கி உள்ள படம் தப்பு தண்டா. புதுமுகங்கள் சத்யா, ஸ்வேதா கய், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை படம் வெளிவருகிறது. இது இன்றைய காலத்துக்கேற்ற பக்கா அரசியல் படம் என்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன். அவர் மேலும் கூறியதாவது:
இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆனது. ஏனென்றால் இக்கதைக்கு அவ்வளவு விரிவான ஆராய்ச்சியும் களப்பணியும் தேவைப்பட்டது. தேர்தலையும், தேர்தல் பிரச்சாரத்தையும், ஓட்டுக்காக பணம் தரும் பாணியையும் மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள காமெடி திரில்லர் தான் தப்பு தண்டா. இப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. சினிமா ரசிகர்களுக்கு நாங்கள் இப்படத்தில் கையாண்டிருக்கும் வித்தியாசமான காமெடி பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
"ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்க முடியாத குற்றம் என்ற கமல்ஹாசனின் வாக்கியம் மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மாநகரம் , ஜோக்கர் போன்ற படங்களுக்கு கிடைத்த வெற்றி அதே வகையான சினிமாவை சார்ந்த தப்பு தாண்டா படத்துக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். என்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்.