தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடித்த படம் 'மகளிர் மட்டும்'. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி 'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
'மகளிர் மட்டும்' படத்தில் சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் எண்ணத்தில் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம். அதாவது ஆண்களை தியேட்டருக்கு வர வைக்கும் உத்தியாக, 'ஆண்களுக்கு மட்டும்' என்ற விதிமுறையோடு இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
''நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி அவர்களை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்ற நான்கு வரிகளும், அந்தப் பெண்ணுடனான உங்கள் செல்பியையும் அனுப்புங்கள்! அவர் உங்கள் அம்மாவாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ, மனைவியாகவோ, காதலியாகவோ அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து அந்த பெண்மணியை நாங்களும் கொண்டாடுகிறோம், ஒரு பட்டுப்புடவையுடன்...'' என விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த போட்டி அறிவிப்பு ஆண்கள் மத்தியில் 'மகளிர் மட்டும்' படத்துக்கு வரவேற்பை அதிகரிக்க செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.