ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்டோரது நடிப்பில் வெளியான மெட்ரோ திரைப்படம், கடுமையான தணிக்கைப் பிரச்சினையில் சிக்கியது. நகரில் நடக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்களை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு கடும் போராட்டத்திற்கு பிறகு தணிக்கை குழுவில் ஏ சான்று கிடைத்தது. படத்திற்கு தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தற்போது வரை தொலைக்காட்சி தணிக்கை கிடைக்கவில்லை.
இதனிடையே லட்சுமி ராய், பாலிவுட்டில் நடித்துள்ள ஜூலி 2 படத்தை பஹ்லஜ் நிஹலானி வெளியிட உள்ளார். இந்நிலையில் ஜூலி 2 போஸ்டரை முன்னிலைப்படுத்தி மாஜி தணிக்கை குழு தலைவர் பஹ்லஜ் நிஹலானியை விமர்சத்திருக்கிறார் இயக்குநர் அனந்த கிருஷ்ணன்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது... "மாநில தணிக்கைத்துறை அதிகாரி மதியழகன், மெட்ரோ படத்துக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான தணிக்கை வழங்க மறுத்ததால் (முதலில் இவர் திரையரங்கத்துக்கான தணிக்கையையும் மறுத்தார்) முன்னாள் தணிக்கைத் துறை அதிகாரி பஹ்லஜ் நிஹலானிக்கு பல முறை நான் இ-மெயில் அனுப்பினேன்.
அவரிடம் நான் கேட்டது மிகவும் எளிதான ஒன்று. திரையரங்க தணிக்கை மறுக்கப்படும்போது அதற்கான மேல்முறையீடு செய்ய வழி இருக்கும்போது, ஏன் தொலைக்காட்சி தணிக்கைக்கும் அப்படி ஒரு வழி இல்லை எனக் கேட்டேன்.
நிஹலானியோ, மற்ற எந்த அதிகாரிகளோ எனது கேள்விக்கு பதில் தரவில்லை. தற்போது நிஹலானி, திரைப்பட வியாபரத்துக்கு வந்துவிட்டார். ஒரு விநியோகஸ்தராக, இந்த அற்புதமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரவிருக்கிறார். படத்தின் பெயர் ஜூலி 2.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜூலி 2 படத்தில் லட்சுமிராய் மிகவும் செக்ஸியாக நடித்திருக்கிறார் என படத்தின் போஸ்டர், டீசரை பார்க்கும்போது தெரிகிறது. இந்தப்படத்தை தணிக்கை செய்து, வெளியிடும், நிஹலானி, தனது படத்தை தொலைக்காட்சியில் வெளியிட மறுப்பது ஏன் என்பதன் ஆதங்கத்தை தான் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் அனந்த் கிருஷ்ணன்.