ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது டூயட் பாடி விட வேண்டும் என்ற ஜெயம்ரவியின் கனவு தனிஒருவன் படத்தில் நனவானது. அதையடுத்து இப்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நனவாகியிருக்கிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் தான் நடித்த அனுபவத்தை தனது நட்பு வட்டாரங்களில் பக்கம் பக்கமாக பேசி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால் நயன்தாராவோ, எத்தனை பக்க டயலாக்கை கொடுத்தாலும் அதை பத்தே நிமிடத்தில் மனப்பாடம் செய்து கொண்டு நடித்து விடுகிறார் சிவகார்த்திகேயன் என்று அவரைப்பற்றி பெருமையாக ஒரு தொலைக் காட்சி பேட்டியில் தெரிவித்தார். மேலும், சிவகார்த்திகேயன், ரொம்ப கலகலப்பான நடிகர். அவர் ஸ்பாட்டில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளுவும் தெரியாது. அந்த அளவுக்கு நடிப்புக்கு நடுவே அவ்வப்போது காமெடி செய்து கொண்டேயிருப்பார் என்கிறார் நயன்தாரா.