இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரிலீசுக்கு ரெடியாகி 3 வருடங்களாக காத்திருந்த படம் புரியாத புதிர். விஜய் சேதுபதி, காயத்ரி, நடித்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பல பிரச்னைகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதில் நடித்த காயத்ரி அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறினார். இப்போதுதான் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி எவ்வளவோ முயற்சித்தும் படத்தை வெளிக்கொண்டு வர முடியயில்லை. இந்த படத்தின் முதல் தயாரிப்பாளரிடமிருந்து ஜே.எஸ்.கே சதீஷ்குமார் வாங்கினார். அவராலும் வெளியிட முடியவில்லை. ஒரு வழியாக இன்று படம் வெளிவரும் என்று அறிவித்து அதற்கான விளம்பரமும் செய்திருந்தார்கள். ஆனால் படத்தை வெளியிட கோர்ட் தடைவிதித்திருக்கிறது. அது பற்றிய விபரம் வருமாறு:
தென்னிந்திய திரைப்டத் தொழிலாளார் சம்மேளன (பெப்சி) பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் சென்னை உதவி உரிமையியல் கோர்ட்டில் புரியாத புதிர் படத்திற்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய்சேதுபதி, நடிகை காயத்ரி ஆகியோர் நடித்துள்ள புரியாத புதிர் படம் நாளை வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிக்கும்போது ஒப்பனைக் கலைஞர்கள், ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதன்படி தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டை கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.2.17 லட்சம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு மேலாளர்கள் சங்கத்துக்கு ரூ.1.67 லட்சம், கலை இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 4.28 லட்சம் உள்பட பல சங்கங்களுக்கு ரூ. 22 லட்சத்து 13 ஆயிரத்து 51 இன்னும் வழங்கப்படவில்லை.
ஆனால் புரியாத புதிர் படத்தை தயாரித்துள்ள ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார் படத்தை திரையிடுவதற்கு முன்பாக சம்பள நிலுவைத் தொகை அனைத்தையும் தருவதாக உறுதியளித்து இருந்தார். ஆனால் கூறியபடி இந்த தொகையை வழங்காமல் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த தொகையை தராமல் இப்படம் வெளியிடப்பட்டால் ஏழைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் ஏழைகள். அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்காமல் படத்தை திரையிடக் கூடாது. ஆனால் அந்த நிலுவைத் தொகைக்காக எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் இல்லை.
ஆனாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைக் கருத்தில் கொண்டு இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் உள்ளது. அதன்படி புரியாத புதிர் படத்தை வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது." இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.