விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
ரஜினி நடித்த கபாலி படத்தில் "நெருப்புடா நெருங்குடா...." பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட இவர், அடுத்தப்படியாக இயக்குநராகவும் களமிறங்குகிறார். தனது முதல்படமாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் எடுக்க உள்ளார்.
இதுகுறித்து அருண்ராஜா காமராஜ் கூறியிருப்பதாவது... இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவிலே நுழைந்தேன். என் வாழ்நாள் ஆசையும் அது தான். நிறைய குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து இப்போது இயக்குநராக களமிறங்குகிறேன்.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன். ஒரு தந்தைக்கும், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம். கிரிக்கெட் ஆடவும், நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்தவுள்ளேன். எனது இந்த இயக்குனர் படலத்தை மிகவும் உற்சாகத்திடம் எதிர்நோக்கியுள்ளேன் என்கிறார் அருண்ராஜா காமராஜ்.