டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தியேட்டர்களில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தியேட்டரில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்புகுழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த விவேகம் படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜ் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முழுவதும் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் சமீபத்தில் வெளியான விவேகம் படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது, அப்படி வசூலித்த தியேட்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களின் பட்டியலும் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு வருகிற செப்டம்பர் 11ந் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட 28 தியேட்டர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.