டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் வெளிவந்த தரமணி படத்தில் ஒரே காட்சியில் நடித்திருந்தாலும் அந்த காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் லிஸி ஆண்டனி. போலீஸ் அதிகாரி எஸ்.கே.சதீஷ்குமாரின் மனைவியாக வந்து அவரை எதிர்த்து போராடி, வாதாடி, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகும் தன்மானமிக்க பெண்ணாக நடித்திருந்தார். தற்போது குணசித்ர கேரக்டர்களுக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது. இதுகுறித்து லிஸி ஆண்டனி கூறியதாவது:
எங்களுக்குப் பூர்வீகம் கேரளா , என்றாலும் நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வட சென்னை வண்ணாரப்பேட்டை. எங்கள் குடும்பம் ஆச்சாரமான கிறிஸ்தவக் குடும்பம். சினிமா பார்க்க அனுமதி இல்லை. வீட்டில் டிவியில் கூட செய்திகள் மட்டுமே பார்க்க முடியும். அவ்வளவு கட்டுப்பாடு உண்டு.
ஆனால் எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம். கிளாசிக்கல் கற்றிருக்கிறேன். இயக்குநர் ராம்சார் முதலில் தங்க மீன்கள் படத்தில் நடிக்க அழைத்தார். நட்பின் பேரில் தான் அதில் ஸ்டெல்லா மிஸ் பாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகு சிறு சிறு வேடங்களில் சுமார் 15 படங்கள் நடித்திருப்பேன். இப்போது தரமணியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. முகம் தெரியாதவர்களிடமிருந்து என் நடிப்பை பாராட்டி பாராட்டுகள் குவிந்து வருவது பரவசம் தருகிறது. ராமின் அடுத்த படமான பேரன்பு சூ மந்திரக்காளி , மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் , மூடர் கூடம் ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் மேலும் ஒரு புதிய படம் என ஐந்து புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்கிறார் லிஸி. ஆக தரமணி லிஸி இப்போ பிஸி.