தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
மற்ற இயக்குனர்கள் எடுக்க தயங்கும், அதேசமயம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் கதையையையும் கதைக்களங்களையும் கையாள்பவர் தான் இயக்குனர் செல்வராகவன்.. கதைகளை தனக்கேற்றவாறு வளைத்துக்கொள்ளும் செல்வராகவன், ஹீரோக்களையும் கதைக்கேற்றவாறு வளைத்துக்கொள்வதும் வழக்கம் தான்.. அப்படிப்பட்ட செல்வராகவன் தனது கனவு ஹீரோ யார் என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வேறு யாருமல்ல.. மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி தான்.
'பிரேமம்' படத்தை பார்த்ததில் இருந்து நிவின்பாலியின் ரசிகராகவே மாறிவிட்டாராம் செல்வராகவன்.. அந்தப்படத்தை பலமுறை பார்த்த செல்வராகவன், அந்தப்படம் தியேட்டர்களில் நன்றாக ஒடிக்கொண்டிருந்த சமயத்திலேயே, தயவுசெய்து இந்தப்படத்தை எந்த மொழியிலும் ரீமேக் பண்ணாதீர்கள் என்கிற கோரிக்கையும் வைத்தார்.. காரணம் 'பிரேமம்' ஜார்ஜ் கேரக்டரில் நிவின்பாலியை தவிர வேறு யாரையும் செல்வராகவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்பதுதான்