டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் நடித்த புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன்நாத் இயக்கும் புதிய படம் என் ஆளோட செருப்ப காணோம். இதில் பசங்க படத்தில் நடித்த பாண்டி ஹீரோவாக நடிக்கிறார். இப்போது அவர் பெயர் தமிழ், ஹீரோயினாக ஆனந்தி நடிக்கிறார். முதலில் பாண்டியுடன் நடிக்க ஆனந்தி மறுத்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் ஜெகன்நாத் கூறியதாவது:
என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. சுமாரான பையன் சூப்பரான ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் செண்டிமெண்டாக நினைக்கும் செருப்பு காணாமல் போகிறது. அதை தேடி காதலன் செல்கிறான். அப்படி செல்லும்போது அவனுக்கு பல புதிய அனுபவங்கள் கிடைக்கிறது. ஒரு சாதாரண செருப்புகூட அசாதாராண மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுதான் படத்தின் கதை.
இதில் சுமாரான பையனாக நடிக்க பாண்டி தேர்வானர். 100 பேருக்கு ஆடிசன் நடத்தியதில் பாண்டி செலக்ட் ஆனார். ஆனால் ஹீரோயின் அழகாக இருக்க வேண்டும் என்பதால் ஆனந்தியை தேர்வு செய்தோம். ஹீரோ பாண்டி என்றதும் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி அய்யய்போ அந்த கருப்பு காமெடி பையனா என்று அதிர்ந்தார். அவர் பசங்க படத்தில் பாண்டியின் தோற்றத்தை நினைத்து மறுத்தார்.
உடனே நான் பாண்டியை அழைத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்கு சென்று தனி போட்டோ ஷூட் நடத்தினேன். விதவிதமான காஸ்ட்யூமில் படம் எடுத்து ஆனந்தியிடம் காட்டினேன். அவரா இவர்னு ஆச்சர்யப்பட்டவர் அதன் பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார். என்கிறார் ஜெகன்நாத்.