ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வருத்தம், வேண்டுகோள், மன்னிப்பு, ஆகிய வார்த்தைகளுக்கு தனித்தனி அர்த்தம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களுக்குள் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையேதான் இந்த மோதல்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதிலும் இருவரது படங்களும் அடுத்தடுத்து வெளிவரும் போது அந்த மோதல்கள் தாறுமாறாகவும் இருக்கும். அப்படி ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 'விவேகம், மெர்சல்' ஆகிய படங்களின் செய்திகளும், வீடியோக்களும் அதற்கு ஒரு காரணம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் நடித்த 'சுறா' படத்தைப் பற்றி பெண் பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் கருத்து தெரிவிக்க அதைத் தொடர்ந்து அவரை விஜய் ரசிகர்கள் பலரும் தரக்குறைவாக விமர்சித்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து விஜய் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 'பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார் விஜய். ஆனால், அவரது ரசிகர்கள் செய்த செயலுக்காக அவருடைய அறிக்கையில் எந்த ஒரு வருத்தமோ, மன்னிப்போ அதில் இல்லை. பொதுவாக பெண்மையைப் போற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். டிவிட்டரில் நடந்த அந்தப் பிரச்சனை பற்றி சிறிதும் அவர் குறிப்பிடவில்லை.
அதே சமயம் நேற்று அஜித் சார்பாக அவருடைய சட்ட ஆலோசகர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சில நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், மற்றவர்களை சமூக வலைத்தளங்களில் அஜித்தின் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். அது அஜித்திற்கு கடும் மன உளைச்சலைத் தருகிறது. இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் அஜித் தன் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக அஜித் அவருடைய மனவருத்தத்தை சட்ட ஆலோசகர் மூலமாவது வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்போதாவது அஜித், விஜய் இருவரும் சமூக வலைத்தள சண்டைகள் பற்றி அவர்களது நிலையை வெளிப்படுத்தினார்களே என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சிதான்.