ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது ஒரே நேரத்தில் இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களில் நடிக்கும் நயன்தாரா, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அதனால் அவரது கால்சீட் டைரி நிரம்பி வழிகிறது. இதில், அதர்வாவுடன் இணைந்து நயன்தாரா நடித் துள்ள இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு எப்போதோ முடிய வேண்டியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை என்கிறார்கள்.
இதற்கு காரணம் நயன்தாராதானாம். காரணம், இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு அவர் லீடு ரோலில் நடிக்க கமிட்டான அறம், கொலை யுதிர்காலம் ஆகிய படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா, அதையடுத்து வேலைக்காரன் படத்திற்கும் கால்சீட் கொடுத்து விட்டாராம். இதனால் இமைக்கா நொடிகளில் நயன்தாரா சம்பந்தப்பட்ட நிறைய காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.
அந்தவகையில், இன்னும் 15 நாட்களுக்கு நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தால்தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்க முடியுமாம். அதனால் நயன்தாராவின் கால்சீட்டுக் காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.