ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொண்டன் படத்தை அடுத்து ஆண்தேவதை, பெட்டிக்கடை இன்று விடுமுறை ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார் சமுத்திரகனி. மேலும், காலா, பேரன்பு, மதுரை வீரன், ஆகாச மிட்டாய் உள்பட பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில், ஆகாச மிட்டாய் மலையாள படத்தை இயக்கி ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், ரஜினி நடிக்கும் காலா படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம்.
காலா படத்தில் சமுத்திரகனியின் கேரக்டர் பற்றி விசாரித்தபோது, இந்த படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க வரும் வேடமாம். அந்தவகையில், கதைப்படி ரஜினியின் வலது கை போன்ற ஒரு வேடத்தில் சமுத்திரகனி நடிப்பதாக சொல்கிறார்கள். அதனால் அவரது கேரக்டர் படம் முழுக்க வருகிறதாம்.
மேலும், காலா படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுக்க வேண்டும் என்பதால், ஏற்கனவே தான் நடித்து வந்த கம்பெனிகளிடம் கொடுத்த கால்சீட் திருப்பி வாங்கியவர், இப்போது காலா படப்பிடிப்பு இல்லாத நாட் களில் அவ்வப்போது கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் சமுத்திரகனி. அந்த வகையில், ஆண்தேவதை படப்பிடிப்பு முடிந்து விட்டபோது 3 நாட்கள் பேட்ஜ் ஒர்க் நடத்த வேண்டும் என்று சமுத்திரகனிக்காக காத்திருக்கிறார்களாம்.