தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெறி படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக தயாராகி வருகிறது.
வருகிற 20ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மெர்சல் படத்தின் இசை பிரமாண்டமாக வெளியாக உள்ளது. முன்னதாக மெர்சல் படத்தில் ஆளப்போறான், நீதானே பாடல்கள் வெளியாகி ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இரண்டு பாடல்களும் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் இருந்தன.
இந்நிலையில் டுவிட்டர் இந்தியா, மெர்சல் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய எமோஜியை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொம்மையை தான் எமோஜி என்கிறார்கள். எந்த ஒரு தென்னிந்திய நடிகரின் படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் விஜய் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் டுவிட்டரில் எமோஜி பெறும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் பெற்றுள்ளது.