பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேரளாவில் முன்னணி நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். கடத்தப்பட்ட நடிகையின் நெருக்கமான நண்பர்கள், தோழிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை கடத்தப்பட்ட அன்று அவர் தப்பித்து நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில் தான் அடைக்கலம் ஆனார். அவர் வீட்டில் சில நாள் தங்கியிருந்தார். கடத்தப்பட்ட நடிகையும், ரம்யா நம்பீசனும் நெருங்கிய தோழிகள்.
இந்த நிலையில் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் போலீசார் நேற்று ரம்யா நம்பீசனை அழைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் கிளப்பில் நடந்த இந்த விசாரணையில் ரம்யா நம்பீசன் 2 மணிநேரம் போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தனது வீட்டிற்கு கடத்தப்பட்ட நடிகை எந்தக் கோலத்தில் வந்தார். அவருக்கு செய்யப்பட்ட முதலுதவிகள் என்ன? மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருந்த விதம். அவர் சொன்ன முதல்கட்ட தகவல்கள் அனைத்தையும் ரம்யா வெளிப்படையாகவும், தைரியமாகவும் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.