'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நான்கு படங்களே நடித்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இடம்பிடித்தவர் நஸ்ரியா. திருமணத்திற்குப்பின் நடிப்பை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிட்டார். இருந்தாலும் 'புலி வருது, புலி வருது கதையாக நஸ்ரியா திரும்பவும் நடிக்க வருகிறார் என கடந்த ஒரு வருட காலமாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனவே தவிர, அவர் நடிக்க வந்தபாட்டை காணோம்.. இத்தனைக்கும் நஸ்ரியா மீண்டும் நடிப்பதற்கு அவரது கணவர் பஹத் பாசிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஆனாலும் அவர் மீண்டும் நடிக்க வரும் செய்தி கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வந்தது..
இந்தநிலையில் நஸ்ரியாவை மீண்டும் நடிக்க அழைத்து வரும் வேலையை 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனர் அஞ்சலி மேனன் மேற்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நஸ்ரியாவின் மிகச்சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் 'பெங்களூர் டேய்ஸ்' படம் தான் முதலிடம் பிடிக்கும். அதனால் மீண்டும் அஞ்சலி மேனன் படத்தில் நடிக்க வேண்டும், அதிலும் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதால் நஸ்ரியா இந்தப்பட வாய்ப்பை உறுதியாக ஏற்றுக்கொள்வார் என்றே சொல்லப்படுகிறது.