ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வீராசாமி படத்திற்கு பிறகு சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த டி.ராஜேந்தர், ஆர்யா சூர்யா, விழித்திரு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பின்னர் கவண் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதற்கு முன்பே ஒருதலைக்காதல் என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்த டி.ஆர்., சில நாட்களாக கொல்லிமலை பகுதியில் படப்பிடிப்பு நடத்தியவர் பின்னர் கிடப்பில் போட்டு விட்டார்.
தற்போது ஒருதலைக்காதல் படத்திற்கு மட்டும் பத்து பாடல்களுக்கு மேல் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறாராம். அதோடு, தனக்கு அவ்வப்போது ஏதேனும் நல்ல டியூன்களை தோன்றினால் உடனடியாக அதை கம்போஸிங் செய்து அவற்றையும் ரெக்கார்ட்டிங் செய்து விடுகிறாராம். அந்த வகையில், தற்போது 32 பாடல்களை பதிவு செய்து வைத்திருக்கிறாராம் டி.ஆர்., அந்த பாடல்களை எதிர்காலத்தில் தான் இயக்கும் படங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறாராம் அவர்.