ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இராம.நாராயணன் இயக்கிய நன்றி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகரான அர்ஜூன். ஆக்சன் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த அவர் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானவர், இப்போதும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான நிபுணன் அவரது 150-வது படமாக அமைந்தது.
அதையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனை வைத்து சொல்லிவிடவா என்ற படத்தை இயக்கி வரும் அர்ஜூன், மற்ற ஹீரோக்களை வைத்து படம் இயக்கவும் ஆர்வமாக இருப்பதாக சமீபத்தில் கூறினார். மேலும், இதுவரை பலதரப்பட்ட கதைகளில் நடித்து விட்டபோதும் தற்போது அர்ஜூனுக்கு இன்னொரு புதிய ஆசை ஏற்பட்டிருக்கிறதாம்.
அது என்னவென்றால், ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்த பாகுபலி படம் போன்று ஒரு பிரமாண்ட சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அர்ஜூனின் தற்போதைய ஆசையாம். அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தால், அதற்காக முழுமையாக என்னை தயார்படுத்திக்கொண்டு நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் அர்ஜுன்.