ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஐபி படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகும் என தனுஷ் உறுதியாக தெரிவித்திருக்கிறார். விஐபி படத்தின் வெற்றியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'விஐபி 2' படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வெளியானபோதும், படத்தின் வசூலில் குறையில்லை. எதிர்பார்த்ததைவிட அதிகவசூலை குவித்து வருவதால், விஐபி-2 படத்தை தனுஷின் வுண்டபார் நிறுவனமும், கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' நிறுவனமும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றன.
இந்நிலையில் விஐபி 2 படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தனுஷ், விஐபி-2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தை அனைவரும் குடும்பத்தோடு வந்து ரசிக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. கஜோல் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நிச்சயம் விஐபி 3யும் உறுதியாக வரும் என்றார்.