ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் நடிகர்கள் தெலுங்கில் படங்களை வெளியிடுவதும், தெலுங்கு நடிகர்கள் தமிழில் படங்களை வெளியிடுவதும் அந்தக் காலத்தைப் போல இப்போது மீண்டும் நெருங்கி வந்துவிட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களும் மாறி மாறி டப்பிங் ஆகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றதால் மற்ற தெலுங்கு நடிகர்களும் தமிழில் நேரடியாக அறிமுகமாக விரும்பியுள்ளனர்.
அவர்களில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படுபவர் மகேஷ் பாபு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் மூலம் மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாக உள்ளார். மகேஷ் பாபு இதற்கு முன் நடித்த பல தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளன. அவர் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'செல்வந்தன்' டப்பிங் படத்திற்காக சென்னையில் நடைபெற்ற விழாவிலும் மகேஷ் பாபு கலந்து கொண்டார். இருந்தாலும் அவையெல்லாம் டப்பிங் படங்கள்.
சென்னையில் பிறந்து வளர்ந்து, லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த மகேஷ் பாபு, தமிழில் நேரடியாக அறிமுகமாகும் படம் 'ஸ்பைடர்' என்பதால் மகேஷ் பாபுவை தமிழ்த் திரையுலகிற்கு வரவேற்கும் விதத்தில் செப்டம்பர் 9ம் தேதியன்று பிரம்மாண்டமான விழா ஒன்றை நடத்த உள்ளார்களாம். அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நெருக்கமான ஹீரோக்களும், பல திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.