பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ரெமோ படங்களில் நடித்ததை அடுத்து விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார். அதேபோல் தெலுங்கில் நானி, பவன் கல்யாணுடன் நடித்து வருபவர், மகாநதி படத்திலும் லீடு ரோலில் நடிக்கிறார்.
இந்த நிலையில், பைரவாவில் விஜய்யுடன் நடிப்பது வரை ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை செலக்ட் பண்ணி வந்த கீர்த்தி சுரேஷ், இப்போது ஹீரோக்களின் படம் என்பதை விட கதைக்கும், கதாபாத்திரத்திற்க்குமே முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.
அவரிடத்தில் அஜித்துடன் நடிப்பதற்கான முயற்சி நடக்கிறதா? என்று கேட்டால், அஜித் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும், தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாய்ப்பு வரும்போது தானாக வரும். அதனால் வருகிற படங்களில் நல்லதாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். இந்தந்த ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது டார்க்கெட் இல்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ்.