இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான தரமணி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. ஐடி பீல்டில் பணியாற்றும் பெண்ணாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதோடு, சில காட்சிகளில் சரக்கடிப்பது, சிகரெட் பிடிப்பது என துணிச்சலாக நடித்திருந்தார்.
இதுபற்றி ஆண்ட்ரியா கூறுகையில், என்னைப் பொறுத்தவரை கதாபாத்திரம் பிடித்திருந்தால் இமேஜ் பார்க்காமல் நடிப்பேன். அந்த வகையில் தரமணி படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் அந்த கேரக்டர் சரக்கு அடிக்க வேண்டும், சிகரெட் படிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னபோது அந்த கதாபாத்திரத்திற்காக அப்படி நடித்தேன். அதனால் அதுகுறித்து விமர்சனங்கள் செய்தாலும் எனக்கு கவலையில்லை.
தரமணி படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன், வடசென்னை படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களிலும் எனக்கு வித்தியாசமான வேடங்கள் தான். வழக்கமான வேடங்களாக இல்லாமல் மாறுபட்ட பர்பாமென்ஸ் கொண்ட வேடங்கள். முக்கியமாக வட சென்னையில் மாறுபட்ட கதாபாத்திரம். ஆண்ட்ரியாவா இது என்று ஆச்சர்யப்படுவார்கள். அப்படியொரு வேடத்தில் நடிக்கிறேன். இதுபோன்ற மாறுபட்ட வேடங்களில் சினிமாவில் தொடரவே ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆண்ட்ரியா.