இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' |
கோவையை சேர்ந்த பிரபல டாக்டர் பாலசுப்பிரமணியம். இவருக்கு அந்த பகுதி மக்கள் வைத்த பெயர் 20 ரூபாய் டாக்டர். கோவை ராஜகணபதி நகரில் கிளினிக் நடத்திய பாலசுப்பிரமணியம் ஆரம்பத்தில் 2 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்கினார். பின்னர் அதை படிப்படியாக உயர்த்தி கடந்த ஆண்டு அவர் மரணம் அடையும்போது 20 ரூபாய் பீஸ் வாங்கினார். அவர் மறைவை அந்த பகுதி மக்கள் எழைகளின் தெய்வம் எங்கள் அய்யா என போஸ்டர் அடித்து ஒட்டி அவரது இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இத்தனை உயர்ந்த உள்ளம் படைத்த டாக்டர் பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் நேற்று நடந்த சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் பட விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
சுசீந்திரன் இயக்கிய அறம் செய்து பழகு படத்தின் டைட்டில், நெஞ்சில் துணிவிருந்தால் என்று மாற்றப்பட்டு, அதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சுசீந்திரன், நடிகர் சந்தீப், விக்ராந்த், லட்சுமி, இசை அமைப்பளார் இமான், ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மணன், தயாரிப்பாளர் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி வெளியிட்டார்.
இதுகுறித்து சுசீந்திரன் கூறும்போது "நெஞ்சில் துணிவிருந்தால் எந்த சாதனையும் சாத்தியம்தான். குறைந்த வருமானத்திலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முடியும் என்று அய்யா பாலசுப்பிரமணியம் நெஞ்சில் துணிவோடு இருந்தார், சாதித்தார். அதனால் அவர் குடும்பத்தை விழாவில் கவுரவப்படுத்தினோம்" என்றார்.