தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழக அரசியல் களம் தான் இன்றைக்கு சூடு பிடிக்கும் களமாக மாறியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசு மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வருகிறார். தமிழக அரசியல் களமட்டுமல்லாது பல்வேறு விஷயங்களையும் முன் எடுத்து வைக்கிறார். அந்தவகையில் தினம் ஒரு பரபரப்பான செய்திகளை தருகிறவர் இப்போதைக்கு கமல் தான் என்றாகிவிட்டது. அப்படி நடிகர் கமல்ஹாசன் இப்போது டுவிட்டரில் தமிழக முதல்வரை பதவி விலக சொல்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "ஒரு மாநிலத்தில் பெரும் விபத்துகள், ஊழல்களுக்காக சம்பந்தப்பட்ட முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் இவ்வளவு ஊழல்கள் நடந்தும், முதல்வரை பதவி விலக சொல்லி எதிர்க்கட்சியினர் ஒருவர் கேட்காதது ஏன்" என்று கூறியிருக்கிறார். அதாவது முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.
மற்றொரு டுவீட்டில்.... "என்னுடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றமே. என் குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு தைரியம் உள்ளது. திமுக., அதிமுக., போன்ற கட்சிகள் ஒரு கருவி மட்டுமே. ஒருவேளை கருவி மழுங்கிவிட்டால் வேறு ஒன்றை தேட வேண்டியது தான்".
தொடர்ந்து மற்றுமொரு டுவீட்டில்... "சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், வெல்வோம்" என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.