வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிக்பாஸ் வீட்டில் பல நேரங்களில் எதிரும் புதிருமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், திட்டிக் கொண்டாலும் அடிப்படையில் அன்பாக ஒருவர் மீது ஒருவர் அக்கறையாக இருந்து வந்தவர்கள் ஷக்தியும், காயத்ரியும். இதற்கு ஒரு அடிப்படை காரணம் உண்டு. காயத்ரியின் தந்தை ரகுமராம் மாஸ்டரும், ஷக்தியின் தாத்தா பீதாம்பரமும் நெருங்கிய நண்பர்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ் படங்களில் தொடர்ச்சியாக ரகுராம் டான்ஸ் மாஸ்டராகவும், பீதாம்பரம் மேக்அப் மேனாகவும் பணியாற்றி வந்தார்கள். இருவம் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். இந்த குடும்ப உறவு பிக்பாஸ் வீட்டிலும் இருந்தது.
ஷக்தி வெளியேறியபோது காயத்ரி கதறி அழுதது இதைத்தான் காட்டியது. ஷக்தி வெளியேறிய பிறகு காயத்திரி தான் தனிமையில் இருப்பதை போன்று உணர்கிறார். ரெய்சா மீது கடும் கோபத்தை காட்டுகிறார். தனியாக புலம்பிக் கொண்டு திரிகிறார். அடுத்த வாரம் நான் வெளியேறிவிடுவேன் என்றும் காயத்ரி சொல்லிக் கொண்டு பிக்பாஸில் புலம்பியபடி தவித்து வருகிறார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.