என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
விஷாலின் சூப்பர் ஹிட் படமான சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமி இயக்குகிறார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரண் மீண்டும் நடிக்கிறார்.
படத்தின் கதை களம் மதுரை. ஆனால் ஒட்டுமொத்த யூனிட்டையும் மதுரைக்கு அழைத்துச் செல்வதிலும், மக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதிலும் நிறைய சிக்கல்கள் இருப்பதால். படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக சென்னை பின்னி மில்லில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மதுரையின் முக்கிய வீதிகளை அப்படியே மறு உருவாக்கம் செய்கிறார்கள். இதில் 500 கடைகள் கொண்ட பஜார், பெரிய கோவில் ஆகியவை முக்கியமானதாக இருக்கும். 6 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இதனை கலை இயக்குனர் ராஜீவன் வடிவமைக்கிறார். 500 தொழிலாளர்கள் இதில் ஈடுப்படுத்தப்படுகிறார்கள். இந்த ஷெட் அமைக்கும் பணி பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ராஜீவன், விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகி எம்.எஸ்.முருகராஜ் உள்பட பலர் இதில் கலந்த கொண்டனர்.