வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகைகளுடன் டூயட் பாடி வந்த சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் இணைந்தார். அதையடுத்து ரஜினிமுருகன், ரெமோ படங்களில் கீர்த்தி சுரேசுடன் நடித்தவர், வேலைக்காரனில் நயன்தாராவுடன் இணைந்து விட்டார். தற்போது பொன்ராம் இயக்கும் படத்தில் படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.
இதையடுத்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் வெளியானதும் சிவகார்த்திகேயன் படவேலைகளை தொடங்குகிறார் விக்னேஷ்சிவன்.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், தற்போது வேலைக்காரனில் நடித்த நயன்தாராவையே மீண்டும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஏற்கனவே விக்னேஷ் சிவனின் நானும் ரெளடிதான் படத்தில் நடித்தவர் நயன்தாரா என்பதோடு அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி மீண்டும் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.