துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகி விட்ட நடிகர் பிரபாஸ், தற்போது 35 வயதை தாண்டிவிட்வார். நடிகர் பிரபாஸூம், அனுஷ்காவும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...
பொதுவாக ஒரு நடிகையுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தால் இதுபோன்ற செய்திகள் வருவது சகஜம், நானும் இதை எதிர்பார்த்தேன். இதுபோன்ற செய்திகள் ஆரம்பத்தில் எனக்கு கஷ்டமாக இருந்தது. பின்னர் அதுவே பழகிவிட்டது. நடிகையுடன் திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. இப்போதைக்கு திருமணத்தை பற்றி நான் யோசிக்கவில்லை, ஆகையால் எனது பெண் ரசிகைகள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ், அடுத்து சாஹோ என்ற படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.