600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு படத்திற்காக நான்கு வருட காலம் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் வேறு எந்த நடிகராவது இருந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் மொத்தமாக நான்கு வருட காலத்தை தன் திரையுலக வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவர் பிரபாஸ். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் 'பாகுபலி' படத்தின் மீது நம்பிக்கை வைத்து இரண்டு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து நல்ல பெயரையும் பெற்றார் பிரபாஸ்.
மீண்டும் அப்படி ஒரு நான்கு வருட காலம் ஒரு படத்திற்காக விட்டுக் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். “நான்கு வருடம் என்பது நீண்ட காலம். ஒரு நடிகரின் திரையுலகப் பயணத்தில் அது மதிப்புமிக்கது. பாகுபலி படத்திற்காக நான்கு வருட காலம் செலவிட்டது எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு படத்திற்காக நான்கு வருடம் செலவிடுவது என்பது மிகவும் நீண்டது. ஆனாலும், ஒரு கதை என்னை ஆச்சரியப்படுத்தினால் அதற்காக இரண்டு வருடங்கள் வேண்டுமானால் செலவிடுவேன்,” எனக் கூறியுள்ளார்.
பிரபாஸ் தற்போது 'சாஹோ' படப்பிடிப்பிற்கான அவருடைய தோற்றத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.