அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மாற்றான், அனேகன், கவண் என மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்போது நான்காவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் கே.வி.ஆனந்துக்குக் கொடுத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதற்கு விக்ரமும் ஆர்வமாக இருக்கிறாராம்.
'இருமுகன்' படத்துக்குப் பிறகு தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார் விக்ரம். இதில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஸ்கெட்ச்' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. எப்போது முடியும் என்று தெரியாது.
விரைவில் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'சாமி 2' படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். அதை முடித்த பிறகு கே.வி.ஆனந்த் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.