'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சில படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலளார்கள் அதிக சம்பளம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள், இனி யாரை வைத்து வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பு பெப்சி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியததோடு கண்டனம் தெரிவித்தது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு பதிலாக நடிகர்களின் சம்பளத்தை குறைத்தாலே தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீதம் செலவு குறையும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விஷால் கூறியதாவது.... "படப்பிடிப்பை நிறுத்த தயாரிப்பாளர்களை தவிர்த்து வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நடிகர்கள் யாரும் சம்பளத்தை அதிகாரமாக கேட்கவில்லை. நடிகர்களின் மார்கெட் உணர்ந்து தயாரிப்பாளர்கள் தருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் சினிமா தலைத்து நிற்கும். யார் வயிற்றிலும் அடிப்பது எங்கள் நோக்கம் இல்லை, இருந்தாலும் தயாரிப்பாளர்கள் நலனையும் பார்க்க வேண்டும். பெப்சியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்" என்றார்.