டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு சினிமாவை ஆட்டி படைக்கும் போதை பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதுவரை, பூரி ஜெகன்னாத், சுப்பராஜூ, தருண், நவ்தீப், ஷ்யாம் கே. நாயுடு, கலை இயக்குனர் சின்னா, நடிகை சார்மி கவுர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ஜூலை 27-ம் தேதியான இன்று கவர்ச்சி நடிகை முமைத்கான் விசாரணையில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்காக புனேயில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்த முமைத்கான், மாலை விசாரணை முடிந்ததும் அங்கிருந்தபடியே பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ள இருக்கிறார்.
முன்னதாக, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முமைத்கான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறக்கூடாது என்கிற விதிமுறை உள்ளது. அப்படி வெளியேறினால் பின்னர் அவரால் அந்த நிகழ்ச்சியை தொடர முடியாது என்று கூறப்பட்டது. ஆனால், போலீஸ் விசாரணை என்பதை தவிர்க்க முடியாது என்கிற காரணத்தினால் முமைத்கானுக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.