ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முப்பது வருடங்களுக்கு முன் சரியாக 1987ம் வருடம் ஜூலை-24ஆம் தேதி, மம்முட்டி நடிப்பில், பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கத்தில், வெளியான படம் தான் நியூடெல்லி. மலையாளத்தில் மம்முட்டி நடித்த படங்கள் தொடர்ந்து அடிவாங்கி கொண்டிருந்த நேரம் அது. இனி அவர் அவ்வளவு தான் என்றும், ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க விரும்பவில்லை என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்தன. ஆனால் 1987ல் வெளியான அந்தப்படம் இமாலய வெற்றி பெறவே மம்முட்டி மீண்டும் பார்முக்கு வந்தார். முன்னணி ஹீரோவாக மாறினார்.
அந்தப்படத்தை தெலுங்கில் கிருஷ்ணம் ராஜூவை வைத்தும், கன்னடத்தில் அம்பரீஷையும் வைத்து தானே ரீமேக் செய்து இயக்கி வெற்றியை சுவைத்தார் இயக்குனர் ஜோஷி. ஆனால் இந்தப்படத்தை ஹிந்தியில் ஜிதேந்திராவை வைத்து ரீமேக் செய்த ஜோஷியால் மற்ற மூன்று மொழிகளைப்போல வெற்றியை பெற முடியவில்லை. இந்தநிலையில் தமிழில் இந்தப்படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றும், அதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என உறுதியாக நின்றார் மலையாளத்தில் இந்தப்படத்தை தயாரித்த ஜாய் தாமஸ்.
மம்முட்டி நடித்த நியூடெல்லி படத்தில் அவரது நடிப்பை பார்த்து அவரது ரசிகனாகவே மாறிப்போனாராம் ரஜினி. ஆனால் அதேசமயம் அவரை அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சொன்னபோது மறுத்துவிட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான். தன்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை பழிவாங்க நினைக்கும் ஹீரோ, ஜெயிலில் அறிமுகமான மூன்று கைதி நண்பர்களின் உதவியுடன் எதிரிகளை அழிப்பதுதான் படத்தின் கதை. ஆனால் தமிழை பொறுத்தவரை, தனது ரசிகர்கள் எதிரிகளை அழிக்கும் விஷயத்தில் தான் ஒரே ஆளாக செயல்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள் என்றும், அதில் நண்பர்கள் கூட்டணியுடன் தான் ஜெயிப்பது போன்ற காட்சிகளை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் கூறி இந்தப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் ரஜினி.