பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
'பிரேமம்' சாய் பல்லவி இப்போது தெலுங்கு தேசத்தில் 'ஃபிடா' சாய் பல்லவி என புகழ் பெற்று விட்டார். மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே மலர் டீச்சர் என அவருடைய கதாபாத்திரப் பெயராலேயே நேசிக்கப்பட்டார். அதே போல தெலுங்கிலும் அறிமுகமான முதல் படத்திலேயே பானுமதி என்ற அவருடைய கதாபாத்திரப் பெயரால் அதிகம் நேசிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார்.
படத்தில் அவருடைய தெலுங்கானா தெலுங்குக்கும், நடனத்திற்கும் தெலுங்கு ரசிகர்கள் மயங்கிவிட்டார்களாம். சாவித்ரி, சௌந்தர்யா வரிசையில் சாய் பல்லவியும் இடம் பெறுவார் என விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
மலையாளத்திலும், தெலுங்கிலும் அறிமுகமாகிவிட்ட சாய் பல்லவி இப்போதுதான் தமிழில் 'கரு' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், “கல்லூரி நாட்களில் இருந்தே சூர்யாவுடைய மிகப் பெரிய ரசிகை நான். அவருடைய படங்களைத் தவறாமல் பார்ப்பேன். எந்த சமயத்திலும் அவருடன் நடிக்கத் தயாராக இருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
சாய் பல்லவியின் ஆசை சூர்யாவுக்கும் கேட்டிருக்குமா ?.