Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குற்றவாளியுடன் செல்பி : போதை பொருள் வழக்கில் சிக்குகிறார் நடிகை சார்மி

26 ஜூலை, 2017 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Charmi-enquiry-in-Drug-Case

போதை பொருள் சப்ளை மற்றும் பயன்பாடு குறித்த வழக்கில் நடிகை சார்மி, சிறப்பு புலனாய்வு குழு முன் இன்று ஆஜரானார். போதை பொருள் விவகாரத்தின் முக்கிய குற்றவாளியுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டது, வாட்ஸ் ஆப் மூலம் 1,000 தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய குற்றவாளி கால்வின்
தெலுங்கு திரைப்பட உலகை போதை பொருள் விவகாரம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கால்வினுடன் தொடர்புடைய திரையுலக பிரமுகர்களுக்கு தெலுங்கானா கலால் துறையின் அமலாக்க பிரிவின் கீழ் செயல்படும் சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை, ஏழு பேர் அந்த குழு முன் ஆஜராகி உள்ளனர்.

நடிகை சார்மிக்கு அதுபோல் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது தன்னிடம் வலுக்கட்டாயமாக, ரத்தம், முடி, நகம் மாதிரிகளை எடுக்க கூடாது; விசாரணையின் போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும்; தனது வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என சார்மி கோரி இருந்தார். ஆனால், வழக்கறிஞர் உடன் இருக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பெண் போலீசார் உடன் இருக்க அனுமதித்தது. அதேபோல், சார்மியின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை கேட்டு பெற வேண்டும் என கூறியிருந்தது.

உடன் வந்த பாதுகாவலர்கள்
அதன்படி, நடிகை சார்மி சிறப்பு புலனாய்வு குழு முன் இன்று காலை ஆஜரானார். ஐதராபாத்தில் உள்ள அப்காரி பவன் கட்டடத்தில் இருந்த குழு முன், ஆஜராக வந்த சார்மியுடன் அவரது பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள் வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. முக்கிய குற்றவாளி கால்வின், தனது மொபைல் போனில், சார்மியின் மொபைல் போன் எண்ணை, சார்மிடா என்ற பெயரில் பதிவு செய்து வைத்து இருந்தார்.

சார்மி சிக்கல்

சார்மி நடித்த ஜோதிலட்சுமி என்ற படம் ரிலீஸான போது நடந்த விழாவில் கால்வினும், சார்மியும் செல்பி போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர் என்பது தெரிய வந்தது. இரண்டு பேரும் வாட்ஸ் ஆப் மூலம், 1,000க்கும் மேற்பட்ட தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். எனவே, இந்த விஷயங்கள் சார்மிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

காலை, 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான சார்மி, மாலை புறப்பட்டு சென்றார். இயக்குனர் புரி ஜெகன்னாத் இயக்கி வரும் பைசா வசூல் படப்பிடிப்பில் பங்கேற்றார். போதை பொருள் விவகாரம் தொடர்பாக, புரி ஜெகன்னாதிடமும் சிறப்பு புலனாய்வு குழு சில நாட்களுக்கு முன் விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in