வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பழக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடந்த விசாரணையில் நடிகை காஜல் அகர்வால், ராசி கண்ணா, லாவன்யா திரிபாதி உள்ளிட்ட சில நடிகர்களின் மேனேஜர் ஆக உள்ள ரோன்சன் ஜோசப் என்பவரை போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்துள்ளனர். அவர் வீட்டிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தனது மேனேஜர் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....
"போதை பொருள் விஷயத்தில் எனது மேனேஜர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. சமூகத்திற்கு கேடு விளைக்கும் எந்த சம்பவத்திலும் நான் ஒருபாதும் ஈடுபட மாட்டேன். என்னிடம் வேலை செய்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை. ஆகையால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் அறிவுறுத்தி உள்ளனர்".
இவ்வாறு காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.