மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
திரையுலகத்தைப் பொறுத்தவரையில் யார் மிகவும் பொறுப்பாக இருக்கிறார்களோ அவர்களை வெற்றி தொடர்ந்து கொண்டேயிருக்கும். பல நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் வந்து தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் பல வருடங்களாக, பல படங்களில் நடித்து வந்தார்கள். இன்றும் சில சீனியர் நடிகர்கள் அதை விடாமல் செய்து கொண்டுதானிருக்கிறார்கள்.
பொதுவாக நடிகைகள்தான் சரியான நேரத்தில் வர மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ளும் நடிகைகளில் சமந்தா முதன்மையானவர் என அவரைப் பாராட்டுகிறார்கள். படப்பிடிப்பு அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பாராம் அவர்.
வரும் அக்டோபர் மாதம் அவருக்கும் நடிகர் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்க உள்ளது. சாதாரண ஜோடிகளே திருமணம் முடிந்ததும் தேனிலவைக் கொண்டாட இப்போது வெளிநாடு பறக்கிறார்ககள். நட்சத்திர ஜோடி என்றால் கேட்கவா வேண்டும். ஆனால், நாகசைதன்யாவும், சமந்தாவும் உடனடியாக எந்த வெளிநாட்டிற்கும் பறக்கப் போவதில்லையாம். திருமணம் முடிந்த மூன்றாவது நாளிலேயே சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என டோலிவுட்டில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ்ப் படத்திலும், 'ரங்கஸ்தலம்' தெலுங்குப் படத்திலும் திருமணம் முடிந்ததும் அவர் கலந்து கொள்ள உள்ளாராம். திட்டமிட்டபடி அந்தப் படங்களை முடிக்க வேண்டும் என்பதால் தான் தனது திருமண விடுமுறையையும் 'கட்' செய்துவிட்டாராம் சமந்தா.