தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் சிறைக்கு சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. திலீப்பிற்கு வேண்டிய ஒருசிலர் மட்டும் அவரை சிறையில் வந்து சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.. ஆனால் திலீப்பின் அம்மா, மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோர் இதுநாள்வரை திலீப்பை சிறையில் வந்து சந்திக்கவே இல்லை.. காவ்யா மாதவனை பொறுத்தவரை போலீஸார் அவர் மீதும் சந்தேக கண் வைத்திருப்பதை உணர்ந்ததாலும், மேலும் சிறைக்கு கணவரை சந்திக்க வரும் விஷயம் அறிந்து பறந்துவரும் மீடியாக்களின் பார்வைக்கும் கேள்விக்கும் ஆளாகிவிட கூடாது என்றும் சிறைக்கு வந்து திலீப்பை பார்ப்பதை தவிர்த்து விட்டாராம்.
அதேசமயம் திலீப்பின் மகள் மீனாட்சி, திலீப் கைதான அன்றே இங்கிருந்து துபாயில் உள்ள திலீப்பின் நெருங்கிய உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது மகள், மனைவி, அம்மா ஆகியோருடன் பேசுவதற்கு வசதியாக, திலீப் சிறையில் உள்ள ஒரு ரூபாய் காயின் போனை பயன்படுத்திக்கொள்ளலாம் என சிறை நிர்வாகம் அனுமதித்துள்ளதாம். சிறையில் திலீப்பிற்கு பேப்பர் படிக்கும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அவர் நாளிதழ்கள் எதையும் வாசிப்பதில்லையாம். படித்தால் அதில் உள்ள தன்னைப்பற்றிய செய்திகள் மனதை காயப்படுத்துகின்றன என்பதால் படிப்பதில்லை என்கிறாராம் திலீப்.