'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். 2017-2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற 30ந் தேதி நடக்கிறது. இதில் இரண்டு அணிகள் போட்டியிடுகிறது.
இயக்குனர் விக்ரமன் தலைமையில் புது வசந்தம் அணியினர் போட்டியிடுகிறார்கள். இதில் தலைவர் பதவிக்கு விக்ரமனும், செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு பேரரசு போட்டியிடுகிறார். இவர்கள் தவிர துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார் ஆர்.வி.உதயக்குமார் ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா , மனோஜ்குமார், வெங்கடேசன். அறிவழகன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சித்ராலட்சுமணன், மனோபாலா சுந்தர்.சி, எழில், லிங்குசாமி, கதிர், கண்ணன், ஏகம்பவாணன், நம்பிராஜன், ஆர்.கே.கண்ணன், முத்துவடுகு, பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த அணியை எதிர்த்து புதிய அலைகள் என்ற பெயரில் உதவி மற்றும் இணை இயக்குனர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர் கே செல்வமணி ஆகியோருக்கு எதிராக புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அவர்களுக்கு புதிய அலைகள் அணி ஆதரவு தெரிவித்துள்ளது.
மற்ற பதவிகளுக்கான புதிய அலைகள் அணி வேட்பாளர்கள் வருமாறு: பொருளாளர் ஆ.செகதீசன், துணைத் தலைவர்: வி.சுப்பிரமணியம் சிவா , இணைச் செயலாளர் ,பி பாலமுரளி வர்மன் , ஜி ஐந்துகோவிலான் ,நாகராஐன், மணிகண்டன் , ஆ.ராமகிருஷ்ணன் . செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கமலக்கண்ணன், கே ஜவஹர் எஸ் கலைச்செல்வன் ,கே காமராஜ் ,கே கதிர்வேலு, பரசு.பாக்யராஜ் , எம் சண்முகம் ஏ சுகுமார், திருமுருகன் வேல்மணி புருசோத்தமன் முருகதாஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
விக்ரமனும், ஆர்.கே.செல்வமணியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் நடத்துகிறார்.