தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார், ஜோதிகா மற்றும் பலர் நடிக்கும் 'நாச்சியார்' படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். பாலா இயக்கத்தில் ஒரு படம் மிகவும் குறைவான நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் படமாக 'நாச்சியார்' உருவாகியுள்ளது.
மார்ச் மாதம் 1ம் தேதி ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு 5 மாதங்களுக்குள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக பாலா இயக்கும் படம் என்றாலே ஒரு வருடத்திற்கு அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும். ஆனால், பாலா இந்தப் படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டு சீக்கிரமே படத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
பாலா இயக்கத்தில் முதல் முறையாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். செப்டம்பர் மாத இறுதியில் இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்தால் செப்டம்பர் இறுதியில் படம் வெளிவரும்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது பற்றி ஜி.வி.பிரகாஷ், “'நாச்சியார்' படத்தின் என் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த ஞாபகங்கள் நீண்ட நாட்களுக்கு இருக்கும். நன்றி பாலா சார், ஜோதிகா மேடம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. அந்தக் குறையை 'நாச்சியார்' போக்குமா என்று பார்க்க வேண்டும்.