'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகராக இருந்த விக்ரம் பிரபு, 'ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற சொந்த பட நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் 'நெருப்புடா'. இயக்குநர் லட்சுமணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இந்தப் படத்தில் தீயணைப்பு வீரராக நடிக்கிறார் விக்ரம் பிரபு.
'சத்ரியன்' படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் தணிக்கை சமீபத்தில் முடிந்து விட்டது. 'நெருப்புடா' படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இதனால் விக்ரம் பிரபு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் வரிவிலக்கு விஷயத்தில் நிலவும் லஞ்சம் மற்றும் வரிவிலக்கு இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.