டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமந்தாவுக்கு நீண்டகாலமாகவே சருமநோய் பிரச்சனை உள்ளது. இதற்காக பல்வேறு சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டாலும், சமந்தாவுக்கு சருமப்பிரச்சனை இன்னும் முழுமையாக தீரவில்லை. குறிப்பாக வெயில் காலங்களில் பெரிதும் அவதிப்படுகிறார். இந்த பிரச்சனை காரணமாகவே ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் கடல் படங்களிலிருந்து விலகினார்.
தற்போது, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சமந்தா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்த சமந்தா, வந்த முதல்நாளே இயக்குநரை அழைத்து ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
வெயிலில் நின்று என்னால் நடிக்க முடியாது. வெயில் அதிகமாவதற்கு முன் என்னுடைய ஷாட்களை எடுத்துவிட வேண்டும். அதன்பிறகு வெயில் குறைந்த பிறகுதான் நடிக்க வருவேன் என்பதுதான் சமந்தா போட்ட கண்டிஷன். அது மட்டுமல்ல, வெயில் நேரடியாக என் மீது படாத அளவுக்கு துணியைக் கட்டி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளாராம். சமந்தா போட்ட கண்ஷனால் சிவகார்த்திகேயன் சற்று அப்செட்டாகிவிட்டாராம்.