வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பழைய படங்களை எடுத்து தூசி தட்டி, இந்தக் காலத்திற்கேற்பட சில பட்டி, டிங்கரிங் வேலைகளைப் பார்த்து புதிதாக யோசித்த கதை போல படைப்பதுதான் இந்தக் காலத்திய டிரென்ட். அந்த விதத்தில் பழைய படங்களைக் காப்பியடிப்பதில் அட்லீ சிறந்த இயக்குனராக இருந்தார். அவருக்குப் போட்டியாக இப்போது 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி வந்துவிட்டனர்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க 1995ம் ஆண்டு வெளிவந்த படமான 'குருதிப் புனல்' படத்தின் கதையை காப்பியடித்து ஒருசில மாற்றங்கள் செய்து 'விக்ரம் வேதா' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் மாதவன், அர்ஜுன் கதாபாத்திரத்தில் பிரேம், வில்லன் நாசர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
'குருதிப் புனல்' படத்தில் நாசர் தலைமையில் தீவிரவாதக் கும்பல். 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி தலைமையில் லோக்கல் ரவுடி கும்பல். காவல் துறைக்கும் வில்லன்கள் குரூப்புக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் பொதுவான கதை.
இந்தக் கால ரசிகர்களை வேண்டுமானால் புதிய கதை எனச் சொல்லி ஏமாற்றி விடலாம். 'குருதிப் புனல்' மாதிரியான படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்தவர்களிடம் 'விக்ரம் வேதா' கதையை புதிய கதை என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.