பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தெலுங்கத் திரையுலகில் சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் இடையே சமீப காலமாக போதைப் பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் சிக்கிய திரைப் பிரபலங்கள் சிலரை விசாரணைக்கு வருமாறு சிறப்பு விசாரணைக் குழுவினர் அழைத்தனர்.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர் சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோர் விசாரணைக்குச் சென்று வந்தனர். அவர்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், சில நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த நாட்களில் விசாரணைக்குச் செல்ல உள்ளார்கள். அவர்களில் தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முமைத் கானும் ஒருவர். வரும் 27ம் தேதி அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அவர் விசாரணையில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
விசாரணைக் குழுவினர் தங்களது விசாரணையை மிகவும் இறுக்கியுள்ளதால் சில திரைப் பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என்றும் டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.