கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் இத்தனை வருடங்களில் யாரும் எதிர்பார்க்காத ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். இந்த முகமெல்லாம் ஹீரோவோ என்று கேள்வி கேட்ட பலருக்கு தன்னுடைய கடுமையான உழைப்பால் திறமையான நடிப்பால் பல படங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார். 'ஆடுகளம்' படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.
ஹிந்தித் திரையுலகத்திலும் 'ராஞ்சனா' படத்தின் மூலம் வசூல் சாதனை படைத்தார். தொடர்ந்து இன்றைய இளம் ஹீரோக்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பாக அமிதாப் பச்சனுடனும் சேர்ந்து நடித்தார். இப்போது 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் த பாகிர்' ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதுவும் இன்றைய இளம் ஹீரோக்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்புதான்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது பற்றி தனுஷ் “முடிவடைந்துவிட்டது, ஃபாகிரின் பயணம் முடிவடைந்தது. நிச்சயமாகவே எக்ஸ்ட்ரார்டினரிதான். என்னுடைய மொத்த குழுவினருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும். உங்கள் அனைவரையும் மிஸ் செய்கிறேன், அடுத்த நிறுத்தம் வீடு தான்” என்று கூறியிருக்கிறார். இப்படம் வெளிவந்ததும் தனுஷ் ஹாலிவுட் வரையிலும் பேசப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
தனுஷ் நாயகனாக நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' அடுத்த வாரம் வெளியாக உள்ளது.