ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
கடந்த எட்டு வருடங்களில் ஆறு படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்யும் அளவுக்கு செலக்டிவான படங்களில் மட்டுமே ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்றிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். அதில் பெரிய படம், சின்னப்படம் என்கிற பாகுபாடு எல்லாம் அவர் பார்ப்பதில்லை. கடைசியாக தமிழில் அவரது ஒளிப்பதிவில் வெளியான மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' மற்றும் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' என இரண்டு படங்களும் அவரை பொறுத்தவரை ஒன்றுதான். அந்தவகையில் தான் 'ஆரண்ய காண்டம்' தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்கும் 'அநீதிக்கதைகள்' என்கிற படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார்.
ஆனால் தற்போது அந்தப்படத்தில் பாதியில் இருந்து வெளியேறி இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். படக்குழுவினருடன் மனஸ்தாபம் என தவறாக நினைத்துவிட வேண்டாம். படம் பாதி முடிந்த நிலையில் சில காரணங்களால் 'அநீதி கதைகள்' படத்தின் மீதி படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனதால், தேதி பிரச்சனை காரணமாக தற்போது அதிலிருந்து விலகி 'ரெமோ' தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் புதியவரான பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கவுள்ள படத்திற்கு சென்றுவிட்டார் பி.சி.ஸ்ரீராம். இதை தொடர்ந்து தேசிய விருதுபெற்ற ஒளிப்பதிவாளரான வினோத் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்றுள்ளாராம்.