ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ஜூலை 8-ந்தேதி லண்டனில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள், அவர் ஹிந்தி பாடல்களை குறைத்து விட்டு தமிழ்ப்பாடல்களையே அதிகமாக பாடுகிறார் என்று குற்றம்சாட்டி விட்டு வெளியேறியதோடு, டிக்கெட் கட்டணத்தையும் திரும்பக் கேட்டுள்ளனர்.
இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அதையடுத்து நியூயார்க்கில அளித்த ஒரு பேட்டியில், நான் என் வேலையை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்திருப்பதாகவே கருதுகிறேன். என் வளர்ச்சிக்கு ரசிகர்கள் தான் காரணம். அவர்கள் இல்லாமல் நான் இல்லை என்று பதிலளித்திருந்தார் ரஹ்மான்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழ் நடிகர்களான சிம்பு, தனுஷ் ஆகிய இருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிம்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "இசைக்கு மொழியே கிடையாது. அது எல்லா மக்களையும் ஒன்றிணைக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஜூனியஸ். இந்த பிரச்சினைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தனுஷ் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், "ஏ.ஆர்.ரஹ்மானின் தாய்மொழியே இசைதான். அதை தவிர வேறு எதுவும் இல்லை. ஜெய்ஹோ" என்று பதிவிட்டுள்ளார்.