அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ராதிகாவும் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் இது என்ன மாயம் என்ற படத்தை தயாரித்தது. இதற்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது. அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வழங்குவதாக தெரிவித்தது. அதன் பிறகும் ராடியன்ஸ் நிறுவனத்திடம் மேலும் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று அதற்கு ஈடாக தி.நகரில் உள்ள வீட்டைக் கொடுத்தது.
ஆனால் ராடியன்ஸ் நிறுவனத்திடம் பேசியபடி நடந்து கொள்ளாமல் அடுத்து பாம்பு சட்டை என்ற படத்தை வெளியிட்டது. கடனை திருப்பிச் செலுத்தாததோடு அடமானம் வைத்த வீட்டையும் விற்க முயன்றது. இதைத் தொடர்ந்து மேற்கண்ட தகவல்களுடன் ராடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அடமானம் வைத்துள்ள சொத்துக்களை விற்க நீதிமன்றம் தடைவிதித்தது.
இந்தநிலையில் இந்த தடை உத்தரவை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததோடு மனுதாக்கல் செய்த மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதனை வருகிற ஆகஸ்ட் 15ந் தேதிக்குள் ராடியன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்யவும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.